Saturday, 1 September 2018

அப்பத்தா

அப்பத்தா ஒரு ஆச்சர்யம்...

பேரன் பந்து வெளயாடிட்டு வந்து படுத்துருக்கானு காலமுக்கி விடுவயே...

அம்மாக்கு தெரியாம தேன்முட்டா ஏலந்தவட வாங்கிக்கனு  25பைசா கொடுப்பயே...

நா செருப்ப தொலச்சா ஊரெல்லாம் தேடுவயே...

வெறகடுப்பு எரிச்சு பேரனுக்கு
கருப்பட்டி காப்பி வப்பயே...

பேரன யாரச்சும் திட்டிப்புட்ட
வெளக்கமாற எடுத்துட்டு சண்டைக்குத்தா போவாளே...

இந்தக் கிழவி பையன கெடுத்து போட்டானு அம்மா திட்டுனாலும் சிருச்சுக்குட்டே போவாளே...

மத்தியான சோத்துக்கு கழி கிண்டி நீ கொடுக்க  பக்குவமா அத புசிக்க....

ஒரு கொய்யா கெடச்சாலும் நீ திங்கமா கொசுவத்துல முடிஞ்சு பேரனுக்குனு கொண்டு வரவளே...

மாரப்பு போடமாட்டா
ஆனாலும் மானத்தோடு வாழ்ந்திருந்தா....

அப்பனுக்கு ஆத்தா
இந்த பேரனுக்கு அப்பத்தா!.....




2 comments: