Wednesday, 11 July 2018

கவிதைனும் சொல்லலாம்...

உப்பை தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொன்னவர்கள்
அந்த தண்ணீரிலும் உப்பு உள்ளது என்பதை அறியலயோ!

பட்டுப் புழுவைக் கொன்று பட்டாடை செய்து
அந்த பட்டாடையில் பட்டாம்பூச்சியை பதிக்க வேண்டுமோ?
கண்ணீர் அஞ்சலியோ!..


வன்முறையாளனுக்கும் காந்தியை பிடித்துப் போகிறது 
பணத்தில் இருப்பதால்...


சுற்றுச் சூழலை காக்க போராடினால் தேசத்துரோகினு சொல்றாங்க
அப்ப பாபர் மசூதிய இடிச்சவங்க யாரு பாரதமாதாவே???..

Tuesday, 10 July 2018

ராவணாயனம்

அடிப் பெண்ணே தினம் தினம் உன்னை தீக்குளித்து கற்பை நிருபிக்கச் சொல்ல நான் ஒன்றும் ராமன் இல்லையே...

Sunday, 8 July 2018

அவளும் பூவும்

வண்டுகளுக்கு உன் மேல் கோபம்
பூவை நீ பறித்து சூடிக்கொள்வதால்
பலருக்கு வண்டுகள் மேல் கோபம்
உன்னையே சுற்றுவதால்!....

செடியை விதவையாக்கிவிட்டு
நீ சுமங்கலியாகிறாயே...

வண்டுகள் பிரம்மச்சாரியாய்
பூக்களெல்லாம் உன்னை விரும்புவதால்!...

Saturday, 7 July 2018

தங்கச்சி காவியம்

பேசுடீ தங்கச்சி...

பேசி பேசியே வளர்ந்த புள்ள
பேசாம போறியே நியாயமா..
பேசாம நீயிருந்தா புத்தி பேதலிச்சு போகுதம்மா...
என்ன கொற இருந்தாலும் அண்ணன
ஏலத்துல விட்டுடாத....
கன்னத்துல அடிச்சுப்போடு ஆன அண்ணன
காலாவதி ஆக்கிடாத...


தங்கச்சி காவியம்

முற்றும் துறந்தானோ புத்தன் என்னவோ
உன் போல் தங்கை கிடைக்காத விரக்தியில்...

உன்போல் தங்கை இல்லையோ ஏன்னவோ வைரமுத்திற்கு
இருந்திருந்தால் கருவாச்சி காவியமா எழுதியிருப்பார்
தங்கச்சி காவியமல்லவா படைத்திருப்பார்...

நாத்திகனுக்கும் வேண்டுதல் வந்துவிடும் உன்போல் தங்கை வேண்டுமென்று...

வால்மீகி காவியத்தில் சீதை நீயென்றால் இனி எத்தனை ராமன்கள் வில் வளைத்து விரும்பினாலும் எந்த ராமன்களுக்கும் உன்னை விட்டுத்தரப்போவதில்லை...
   
                                         - அன்பு அண்ணன்

Dubmash

ரத்தக்கண்ணீர்...

ஆன்மீகம் ஆகாத அறிவியலே

ஆன்மீகம் ஆகாத அறிவியலே....