அண்ணன் கம்மங்கூழு வாங்கித் தாரேன்
கண்ணுறங்கு தங்கச்சி....
ஏந்தங்கச்சி ஒடம்பு வர
எருமத் தயிரு வாங்கி வாரேன்
கண்ணுறங்கு கண்மணியே...
சிணுங்காம கண்ணுறங்கு
சீமைக்குத்தா கூட்டிப் போறேன்....
சீர்வரிசை வண்டியில கொண்டு வாரேன்
சிலுத்துக்காம கண்ணுறங்கு...
பஞ்சுமிட்டாய் வாங்கித்தாரேன்
பயக்காம கண்ணுறங்கு...
பாட்டி வடை சுட்ட கதை தெரியலயோ
காகம் அதை தூக்கிப்போன கதையும் தெரியலயோ
அழகாக சொல்லி தாரேன்
அழுகாம கண்ணுறங்கு ...
வானவில்ல கொண்டு வந்து வளையல்தா செஞ்சு தாரேன்
வஞ்சிக்கொடியே நீ கண்ணுறங்கு...
கண்ணுறங்கு கண்ணுறங்கு
ஏன் கண்ணே கண்ணுறங்கு
அண்ணன் அழகாக பாத்துக்குறேன்
அம்சமாக கண்ணுறங்கு...
காலேசு போறவளே தங்கச்சி, ராமன்கள் பலருண்டு
ராவணன் நான் மட்டும்தான்.....
ராமன்கள் வருத்தினாலும்
கேட்க அண்ணன் ராவணனுண்டு
கலங்காம கண்ணுறங்கு....
கண்ணுறங்கு தங்கச்சி
கண்ணுறங்கு.....
- மா.தினேஷ்குமார்
No comments:
Post a Comment